Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமல்ஹாசன் அடாவடியான ஆள் கிடையாது... இப்படியும் பேசினார் முக்தா சீனிவாசன்!
அதாவது அவர் கூறுகையில், விஸ்வரூபம் படம் ரிலீஸாகாமல் தடை செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்களுக்கு ரிசர்வேஷன் பணம் திருப்பித் தரப்படவில்லை. இது கமல்ஹாசனின் ஏமாற்று வேலை என்றெல்லாம் பேசினார். ஆனால் அதே வாய் கமல்ஹாசனை வேறு மாதிரியாகவும் பேசியது.
அந்தப் பேச்சு...
கமல்ஹாசன் என் நண்பர். அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. என்றாலும், விஸ்வரூபம் பட பிரச்சினை பற்றிய என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
கமல், அடாவடியான ஆள் கிடையாது. அவரை, 7 வயதில் இருந்தே எனக்கு தெரியும். சினிமா ஒன்றுதான் சாதி-மதத்துக்கு அப்பாற்பட்டது. அதற்குள் சாதி-மத பிரச்சினையை கொண்டுவரக்கூடாது. விஸ்வரூபம் பட பிரச்சினையில், கமல்ஹாசனும், முஸ்லிம்களும் மீண்டும் ஒரு முறை சந்தித்துப்பேசி, ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கி, சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரிசர்வேஷன் செய்த பணத்தை உடனே திரும்ப கொடுத்துவிட வேண்டும். சினிமாவில் பணம் ஒரே இடத்தில் முடங்கக்கூடாது. அப்படி முடங்கினால், அது மற்ற படங்களை பாதிக்கும்.
நான், சினிமாவுக்கு வந்து 66 வருடங்கள் ஆகிறது. 45 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த வகையில், இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறேன் என்றார் முக்தா.