Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'சிம்பு, அனிருத்... அடுத்த தலைமுறையை பாழாக்கிடாதீங்கப்பா!' - மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன்
சென்னை: இன்றைய தலைமுறை கலைஞர்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன். வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டி, பாழாக்கி விடாதீர்கள். மரபுகளையும், பண்புகளையும் மாசுபடுத்தி விடாதீர்கள், என்று கேட்டுக் கொண்டுள்ளார் மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் அனுபவம் மிக்கவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா வி சீனிவாசன்.
சிம்பு- அனிருத் உருவாக்கி, இன்று தமிழ் சினிமாவையே அசிங்கப்படுத்தியுள்ள ‘பீப்' பாடல் தொடர்பாக இவர் விடுத்துள்ள அறிக்கை:
"பாலுணர்வு தொனிக்கும் ‘பீப்' பாடல் என்கிற பாடலை இரு இளைஞர்கள் பதிவு செய்து, அதை பரவலாக வினியோகித்து இன்று கண்டனத்துக்கும், போலீஸ் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளார்கள். இது தேவையற்ற வேலை. இன்றைய திரைப்பட பாடல்களை வேறு முறைக்கு திருப்பும் தவறான வேலை இது.
அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் சுவையாகவும், அறிவாற்றல் கொண்டதாகவும், அறிவுரை சொல்வதாகவும் இருந்தன. ‘மண்ணுக்கு மரம் பாரமா...மரத்துக்கு இலை பாரமா...பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?' என்ற பாடலில் இலக்கியமும், அறிவுரையும் இருந்தது.
‘தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்று பெயர் வாங்காதே' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். எத்தனை கருத்துக்களை சொன்னார்?
இன்றைய தலைமுறை கலைஞர்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன். வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டி, பாழாக்கி விடாதீர்கள். மரபுகளையும், பண்புகளையும் மாசுபடுத்தி விடாதீர்கள்.
அடுத்த தலைமுறையில் வாழப்போகிறவர்கள் நமது பேரன்கள்தான். அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லாவிட்டாலும், தப்பான புத்தி சொல்லாதீர்கள்."
இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார்.