Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நடிகை
ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக நடிகை முமைத் கான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.
தமிழை போன்றே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு நிகழ்ச்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முமைத் கான்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை முமைத் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விசாரணை
போதைப் பொருள் விவகாரம் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முன்பு முமைத் கான் வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
பிக் பாஸ்
விசாரணைக் குழு முன்பு ஆஜராக வேண்டியுள்ளதால் முமைத் கான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாராம். முமைத் விசாரணைக்கு வர உள்ளதை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நடிகர்கள்
தெலுங்கு திரையுலகை சேர்ந்த ரவி தேஜா, சார்மி கவுர், டான்ஸ் மாஸ்டர் ஷ்யாம் நாயுடு, தருண், தனிஷ் உள்ளிட்ட 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.