Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி: வாரிசு நடிகரை திட்டி இ-சலான் அனுப்பிய போலீஸ்
மும்பை: மும்பையில் நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி எடுத்த நடிகர் வருண் தவானை எச்சரித்ததுடன் அபராதம் விதித்துள்ளது காவல் துறை.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது அவர் வாகனத்திற்கு அருகில் நின்ற ஆட்டோவில் இருந்த இளம் பெண் வருணை பார்த்ததும் குஷியாகி செல்போனில் போட்டோ எடுத்தார்.
இதை பார்த்த வருண் தவான் செய்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்
வருண் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி காரில் இருந்து தலையை எட்டிக் கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படம் நாளிதழ் ஒன்றில் வெளியாகி மும்பை போலீஸ் கண்ணில் பட்டது.
|
எச்சரிக்கை
செல்ஃபியை பார்த்த மும்பை போலீசார் வருண் தவானை எச்சரித்து அபராதம் விதித்து இ-சலான் அனுப்பியுள்ளனர். இது போன்ற விஷயங்கள் படத்தில் ஒர்க்அவுட்டாகும் நிஜத்தில் அல்ல. நீங்கள் உங்களுடைய மற்றும் சிலரின் உயிரை பணயம் வைத்து போட்டோ எடுத்துள்ளீர்கள். பொறுப்பாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இ-சலான் உங்கள் வீட்டிற்கு வருகிறது. அடுத்த முறை கடினமான தண்டனை இருக்கும் என்று மும்பை போலீஸ் ட்வீட்டியுள்ளது.
|
வருண்
மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் டிராபிக் சிக்னலில் இருந்தோம். கார்கள் நகரவில்லை. ரசிகையின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த முறை பாதுகாப்பை மனதில் வைத்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்க மாட்டேன் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார் வருண்.
ட்விட்டர்
வருண் தவான் ரசிகை ஒருவருடன் நடுரோட்டில் செல்ஃபி எடுத்து அதற்காக அபராத சலான் பெற்றது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.