Don't Miss!
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- News நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி: வாரிசு நடிகரை திட்டி இ-சலான் அனுப்பிய போலீஸ்
மும்பை: மும்பையில் நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி எடுத்த நடிகர் வருண் தவானை எச்சரித்ததுடன் அபராதம் விதித்துள்ளது காவல் துறை.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது அவர் வாகனத்திற்கு அருகில் நின்ற ஆட்டோவில் இருந்த இளம் பெண் வருணை பார்த்ததும் குஷியாகி செல்போனில் போட்டோ எடுத்தார்.
இதை பார்த்த வருண் தவான் செய்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்
வருண் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி காரில் இருந்து தலையை எட்டிக் கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படம் நாளிதழ் ஒன்றில் வெளியாகி மும்பை போலீஸ் கண்ணில் பட்டது.
|
எச்சரிக்கை
செல்ஃபியை பார்த்த மும்பை போலீசார் வருண் தவானை எச்சரித்து அபராதம் விதித்து இ-சலான் அனுப்பியுள்ளனர். இது போன்ற விஷயங்கள் படத்தில் ஒர்க்அவுட்டாகும் நிஜத்தில் அல்ல. நீங்கள் உங்களுடைய மற்றும் சிலரின் உயிரை பணயம் வைத்து போட்டோ எடுத்துள்ளீர்கள். பொறுப்பாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இ-சலான் உங்கள் வீட்டிற்கு வருகிறது. அடுத்த முறை கடினமான தண்டனை இருக்கும் என்று மும்பை போலீஸ் ட்வீட்டியுள்ளது.
|
வருண்
மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் டிராபிக் சிக்னலில் இருந்தோம். கார்கள் நகரவில்லை. ரசிகையின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த முறை பாதுகாப்பை மனதில் வைத்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்க மாட்டேன் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார் வருண்.
ட்விட்டர்
வருண் தவான் ரசிகை ஒருவருடன் நடுரோட்டில் செல்ஃபி எடுத்து அதற்காக அபராத சலான் பெற்றது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.