Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி: வாரிசு நடிகரை திட்டி இ-சலான் அனுப்பிய போலீஸ்
மும்பை: மும்பையில் நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி எடுத்த நடிகர் வருண் தவானை எச்சரித்ததுடன் அபராதம் விதித்துள்ளது காவல் துறை.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது அவர் வாகனத்திற்கு அருகில் நின்ற ஆட்டோவில் இருந்த இளம் பெண் வருணை பார்த்ததும் குஷியாகி செல்போனில் போட்டோ எடுத்தார்.
இதை பார்த்த வருண் தவான் செய்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்
வருண் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி காரில் இருந்து தலையை எட்டிக் கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படம் நாளிதழ் ஒன்றில் வெளியாகி மும்பை போலீஸ் கண்ணில் பட்டது.
|
எச்சரிக்கை
செல்ஃபியை பார்த்த மும்பை போலீசார் வருண் தவானை எச்சரித்து அபராதம் விதித்து இ-சலான் அனுப்பியுள்ளனர். இது போன்ற விஷயங்கள் படத்தில் ஒர்க்அவுட்டாகும் நிஜத்தில் அல்ல. நீங்கள் உங்களுடைய மற்றும் சிலரின் உயிரை பணயம் வைத்து போட்டோ எடுத்துள்ளீர்கள். பொறுப்பாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இ-சலான் உங்கள் வீட்டிற்கு வருகிறது. அடுத்த முறை கடினமான தண்டனை இருக்கும் என்று மும்பை போலீஸ் ட்வீட்டியுள்ளது.
|
வருண்
மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் டிராபிக் சிக்னலில் இருந்தோம். கார்கள் நகரவில்லை. ரசிகையின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த முறை பாதுகாப்பை மனதில் வைத்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்க மாட்டேன் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார் வருண்.
ட்விட்டர்
வருண் தவான் ரசிகை ஒருவருடன் நடுரோட்டில் செல்ஃபி எடுத்து அதற்காக அபராத சலான் பெற்றது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.