Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஸ்ரீதேவியின் கணவரின் இமெயிலை ஹேக் செய்து வாலிபரிடம் ரூ.3.5 லட்சம் அபேஸ் செய்த ஜோடி
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரின் இமெயிலை ஹேக் செய்த இருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்தவர் கரண் கமல் சர்தா. அவர் தனது பெற்றோரின் மறைவுக்கு பிறகு தனது சகோதரியுடன் கடந்த 2010ம் ஆண்டு மும்பை வந்து செட்டிலாகியுள்ளார். கரணின் சகோதரி மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கரண் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மேலும் கஹானி தேவி என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் கரணின் மாமா லண்டனில் இருந்து மும்பை வருகையில் விமானத்தில் அவருக்கு அர்ச்சனா சர்மா(27) என்ற பெண் பழக்கமாகியுள்ளார். அர்ச்சனாவிடம் கரண் பற்றி அவரது மாமா தெரிவித்துள்ளார். அதற்கு அர்ச்சனா கரணுக்கு சினிமாவில் தான் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு அழகு நிலையத்தில் வைத்து அர்ச்சனா கரணை சந்தித்து பேசியுள்ளார்.
மோஹித் ரெய்னா என்பவர் 2005ம் ஆண்டு ரிலீஸான ஹிட் படமான நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகமான நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி என்ற படத்தை எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா. பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கரணை ரெய்னா என்பவரிடம் பேச வைத்துள்ளார். படத்தில் நடிக்க ரூ.3.5 லட்சம் தர வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜுஹுவில் உள்ள பிவிஆரில் கௌரவ் ஜோஷி(28) என்பவரை சந்திக்க வேண்டும் எனவும் அர்ச்சனா கரணிடம் கூறியுள்ளார்.
கரணும் ஜோஷியை சந்தித்து இரு தவணைகளில் பணத்தை அளித்துள்ளார். கரணுக்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரிடம் இருந்து படம் குறித்து இமெயில் வந்துள்ளது.
பணத்தை பெற்ற பிறகு அர்ச்சனாவும், ஜோஷியும் கரணை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் போனி கபூரின் இமெயிலை அந்த 2 பேரும் ஹேக் செய்து இமெயில் அனுப்பியது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனா மற்றும் ஜோஷியை கைது செய்துள்ளனர்.