பாலிவுட் நடிகர்களுக்கு பாதுகாப்பைக் குறைக்கும் மும்பை போலீஸ்!

By Manjula

மும்பை: மும்பை மாநகரத்திற்கும் தாதாக்கள் உருவாவதற்கும் என்ன ஒரு ராசியோ அதே ராசிதான், தாதாக்களுக்கும் இந்தி நடிகர்களுக்கும்.

இந்திய அளவில் பல நிழல் உலக தாதாக்கள் மும்பையில் உருவாகி இன்றளவும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அனைத்துப் போலீசாலும் தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராகிம் தனது காலத்தில் மும்பை பிரபலங்களை ஒரு ஆட்டு ஆட்டி வைத்தார்.

Mumbai crime branch to strip Bollywood celebrities of extra security cover?

தற்போது அதே போன்று தாதா ரவி புஜாரிக்குப் பயந்து மும்பை பிரபலங்களின் பாதுகாப்பை அதிகப் படுத்தியுள்ளது மும்பை காவல்துறை. நடிகர் சல்மான் கான், ஷாரூக்கான், பரா கான் மற்றும் விது வினோத் சோப்ரா ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தித் தயாரிப்பாளர் அலி மொரானியின் வீட்டைச் சுற்றி ரவி புஜாரி மற்றும் அவனது ஆட்களின் துப்பாக்கிச்சூடு நடந்தது.

அதிலிருந்தே மும்பையில் பல பிரபலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது, எனினும் தற்போது பாதுகாப்பைக் குறைக்க போலீிஸார் முடிவு செய்துள்ளனராம். இதனால் பாலிவுட் பிரபலங்களுக்கு நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் அதிகரிக்கலாம் என்று திரையுலகினர் அச்சத்தில் உள்ளனர்.

தாதா ரவி புஜாரியின் கூட்டாளிகள் பலரைப் பிடித்து விட்டதால் மிரட்டல் படிப்படியாக குறையும் என்பது போலீஸ் கணக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X