Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உத்தா பட விவகாரம்... தணிக்கைக் குழுவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மும்பை: உத்தா பஞ்சாப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்த தணிக்கை வாரியத்துக்கு மும்பை உயர்நீதி மன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த படம் ‘உத்தா பஞ்சாப்'. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்து உள்ளனர். இந்த படம் 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்' படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கை குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும், 89 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. அத்துடன் படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்' பெயர் இடம்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.
இதனால், கடுப்பான தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி 89 இடங்களை வெட்டி நீக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறும்படி மத்திய தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் "இதுவரை திரைப்படங்களில் போதை பழக்கம் பற்றி காட்டப்படவில்லையா? சிலர் இதை மோசமாக சித்தரிக்கலாம், சிலர் கலைநயத்தோடு சித்தரிக்கலாம். ஆனால் இது எப்படி ஒரு மாநிலத்தை அவமதிப்பதாக ஆகும்?
புற்றுநோய் அதிகமாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மோகா மாவட்டத்தை பற்றி ஒரு படம் உள்ளது. அது அந்த நகரத்தை இழிவுபடுத்தவில்லை மாறாக அந்த பிரச்சினையின் தீவிரத்தை பற்றி பேசுகிறது," என்று தெரிவித்தார்.