Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிக்கனை இலவசமாக வழங்கி, சஞ்சய் தத் விடுதலையைக் கொண்டாடும் உணவகம்.. இங்கல்ல மும்பையில்!
மும்பை: நடிகர் சஞ்சய் தத் விடுதலையை முன்னிட்டு சிக்கன் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று மும்பை உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதாகி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் பிப்ரவரி 25ம் தேதி விடுதலையாக உள்ளார்.
தண்டனைக் காலம் முழுவதையும் ஏராளமான பரோல்களில் கழித்த சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடிவடையும் முன்பே, விடுதலையாவது மிகப்பெரிய சர்ச்சையை எற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சஞ்சய் தத் மீதான பாசத்தில் அவரது குடும்பத்தினரை மிஞ்சியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர்.
நூர் முஹமதி என்ற அந்த உணவகத்தின் உரிமையாளர் பிப் 25 ம் தேதி சஞ்சய் தத் விடுதலையாவதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிக்கன் உணவு ஒன்றை வழங்கவிருக்கிறார்.
அந்த சிறப்பு உணவிற்கு 'சிக்கன் சஞ்சு பாபா' என்று பெயர் வைத்திருக்கும் அவர், தனது கையால் அந்த சிறப்பான சிக்கன் உணவை சஞ்சய் தத்திற்கு வழங்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.