ஆளப்போறான் தமிழன் பாடலைத் தொடர்ந்து.. விவேக் எழுதிய முரட்டு தமிழன்டா !
சென்னை: தனுசின் பட்டாஸ் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இதனையடுத்து படத்தின் பேட்ட பாய் பாடல் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து விட்டது. இதனையடுத்து படத்தின் முன்னோட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதற்கு முன்பே விருந்து வைக்க தயாராகி இருக்கிறது படக்குழு .
ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் மற்றும் தனுஷ் நேரடியாக இணையும் இரண்டாவது படம் என்று கூறலாம், ஏனெனில் தனுஷ் தயாரிப்பில் தான் ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் தனது முதல் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார் .அதற்கு பின் கொடி படத்தில் வெற்றிமாறன் மற்றும் பி.மதன் தயாரிப்பில் தனுசுடன் பணியாற்றி இருந்தார் .தனுஷ் நடித்த முதல் இரட்டை வேட திரைப்படம் கொடி தான்.

தற்போது பட்டாஸ் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அதனை தொடர்ந்து படத்தின் முன்னோட்டத்தை எதிர்பார்த்து கொண்ட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் படத்தின் இரண்டாம் பாடலை வெளியிட இருக்கிறது படக்குழு.

இந்த தகவலை பாடலாசிரியர் விவேக் அவர்கள் ட்விட்டரில் பாடலின் சில வரிகளுடன் பதிவேற்றி இருக்கிறார். அதில் இந்த ஆரம்பம் புதுசு வரலாறு பெருசு எந்த மானுட குலமும் எங்க புகழ தொட்டது கிடையாது மண் சாயுர பொழுதும் வேல் மார்புல இருக்கும் எந்த எதிரியின் வாளும் எங்க முதுக பாத்தது கிடையாது என்று தமிழர்கள் பெருமை பேசும் வரிகளை படைத்திருக்கிறார் விவேக் .

விவேக் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது ஆளப்போறான் தமிழன் பாடல் தான் அந்த வெற்றி பாடலை தொடர்ந்து பல முன்னனி ஹீரோக்களுக்கு விவேக் தான் பாடலாசிரியர் .தற்போது இந்த பாடலுக்கு கூட முரட்டு தமிழன்டா என்ற தலைப்பு வைத்திருக்கிறார் விவேக் ஆளப்போறான் தமிழன் போல் இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .


Click it and Unblock the Notifications











