Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்!
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. நர்ஸான இவர் அரசியல்வாதியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் விளைவாக பின்னர் உயிரை இழந்தார். இவரது கொலைச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது பன்வாரி தேவி கதையை பாலிவுட்டில் படமாக்குகின்றனர். பன்வாரி தேவி வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மல்லிகா இந்த வேடத்தில் நடிக்கக் கூடாது என்று சிலர், தொலைபேசி மூலம் மல்லிகாவின் தம்பியைப் பிடித்து மிரட்டினராம்.
இதுகுறித்து மல்லிகா கூறுகையில், எங்களுக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். சிலர் எனது சகோதரரிடம் போன் மூலம் உனது சகோதரியிடம் சொல்லி இந்தி விவகாரத்தில் இருந்து விலகிட சொல் என கூறி உள்ளனர். என்னை யாரும் இதுவரை நேரடியாக மிரட்டவில்லை.
ஒவ்வொரு நடிகரும் நடிகையும் அரசியலுக்கு பலியாகிறார்கள். ஒவ்வொரு நாளும் அரசியல் செய்தாக வேண்டும். இந்தியாவில் வாழ்வதற்கு கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டும். நான் நல்ல அரசியல்வாதியாகவும் கெட்ட அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறேன் என்றார் மல்லிகா.