Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்! கொண்டாடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: பார்வையற்ற மற்றும் பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவருக்கு இசையமைப்பாளர் இமான் பாட்டுப்பாட வாய்ப்பு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞர் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இளம் வயதிலேயே பெற்றோரையும் இழந்து ஆதரவற்று தவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்ணே பாடலை பாடினார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்!
|
நம்பரை கேட்ட இமான்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கவனித்த இசையமைப்பாளர் டி இமான், இந்த இளைஞரின் போன் நம்பரை கேட்டு தனது டிவிட்டர் பக்ககத்தில் டிவிட்டியிருந்தார்.
இசையில் பாட வாய்ப்பு
அதனை பார்த்த சிலர், அந்த இளைஞரின் நம்பரை பெற்று தந்தனர். இதனைத்தொடர்ந்து திருமூர்த்தியிடம் பேசிய இசையமைப்பாளர் இமான், அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.
|
பாட வாய்ப்பு தருவோம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தொடர்பை பகிர்ந்தமைக்கு அனைவருக்கும் நன்றி. அந்த நபரிடம் பேசிவிட்டேன். விரைவில் அவருக்கு ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம். கடவுள் அவருடன் இருக்கட்டும் அவருக்கு ஆறுதலை கொடுக்கட்டும். திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான நாட்கள் உள்ளன.. கடவுளை புகழுங்கள்.. என பதிவிட்டிருக்கிறார்.
|
நன்றி இமான்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இமானை பாராட்டியுள்ளனர். மேலும் பார்வையற்ற இளைஞரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த உங்களுக்கு நன்றி என்றும் டிவிட்டியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
|
பாத்துப்பான் அண்ணா..
நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பாத்துக்கிட்டா
நமக்கு மேல இருக்குறவன் நம்மல பாத்துப்பான்..நமக்கு மேல இருக்குறவன் கண்டிப்பாக உங்களை பாத்துப்பான் அண்ணா என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.