Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இசையமைப்பாளர் தேவா தாயார் மரணம் - ஜெயலலிதா இரங்கல்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
மறைந்த கிருஷ்ணவேணியின் கணவர் பெயர் சொக்கலிங்கம். கிருஷ்ணவேணி-சொக்கலிங்கம் தம்பதிக்கு, தேவா, சம்பத், சபேஷ், முரளி, சிவா ஆகிய 5 மகன்களும், செல்வி என்ற ஒரேயொரு மகளும் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி மறைவு குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரும், திரைப்பட இசையமைப்பாளருமான தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி உடல்நலக்குறைவு காரணமாக 4-ந் தேதி (நேற்று) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயாரை இழந்து வாடும் தேவாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்று கூறப்பட்டுள்ளது.