Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எவிக்ஷனில் கடைசி வரை போராடும் ரம்யா.. பிரபல இசையமைப்பாளர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் கடைசி வரை ரம்யா பெட்டியுடன் அலைக்கழிக்கப்பட்டது குறித்து பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
யார் மீது தவறு? யார் செய்தது சரி என்று ரிவ்வியூ கொடுத்து வருகிறார். ஆரிக்கு கொடுக்கப்படும் மன உளைச்சலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இனியும் நக்கல் நய்யாண்டி வருமா? தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!
ஏ சர்ட்டிஃபிகேட்
பாலாஜி போன்ற பிளேயர்கள் இருக்கும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்க முடியாது என்று கூறிய ஜேம்ஸ் வசந்தன், இந்த நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள் என்று காட்டமாக கூறியிருந்தார்.
பெட்டியுடன் அலைச்சல்
இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் ரம்யா பாண்டியன் கடைசி வரை எவிக்ட்டாக போகிறோமா இல்லையா என்று தெரியாமல் பெட்டியுடன் அலைந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், சரியான செய்கை என பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே சொல்லியிருந்தேன்
இந்நிலையில் மூன்றாவது புரமோ குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்த வாரத்தின் தொடக்கத்தில் நான் சொல்லியிருந்தேன் - "Som or Gabi முதலில் சேவ் ஆவார்கள்; ரம்யா வெளியேற்றப்படுவார்" என்று.
மக்களின் பரவலான உணர்வு
நான் தெரிந்துதான் ஆஜித்தை இரண்டாவது ஆப்ஷனாக சொல்லவில்லை. நான் பிரிடிக்ட் பண்ணியது என் விருப்பமல்ல; மக்களின் பரவலான உணர்வு. ரம்யா வெளியே அனுப்பப்பட மாட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இன்றைய புரமோ 3-ல் பார்த்திருப்பீர்கள்.
இறுதி நொடிகளின் பதற்றம்
இதுவரை அதிகம் நாமினேட் கூட ஆகாத, ஆன சமயங்களிலும் முதலிலேயே சேவ் ஆகிவிடுகிற ரம்யா இன்று ஆஜித்துடன் இறுதி நொடிகளின் பதற்றத்தில் இருப்பதுதானே உங்கள் தீர்ப்பின் நிரூபணம்! என பதவிட்டுள்ளார்.
அடுத்த வாரமாவது?
அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆமாம் ஜஸ்ட்டில் மிஸ்ஸாகி விட்டார் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ஒரு சார்பாக விளையாடும் ரம்யா பாண்டியன் எப்போதோ வெளியேற்றப்பட வேண்டியவர், அடுத்த வாரமாவது போவாரா அல்லது ஃபைனல்ஸ் வரை ஓட்டுவார்களாக என்று பார்ப்போம் என பதிவிட்ட வருகின்றனர்.