Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ நடிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது என விளாசி விட்டிருக்கிறார் பிரபல இசையமைப்பாளர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரியோ, குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு அன்பு கேங் என அர்ச்சனா தலைமையில் விளையாடி வந்தார்.
எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
அர்ச்சனா வெளியே சென்ற பிறகு, சோம், கேபியுடன் சேர்ந்து அவர்கள் மூன்று பேர் மட்டும் ஒரு கேங்காக இருந்து வந்தனர். அன்பை வெளிப்படுத்துகிறேன் என அவ்வப்போது ரியோ சக பெண் ஹவுஸ்மேட்ஸ்களை கட்டிப்பிடித்து வருகிறார்.
கட்டிப்பிடி வைத்தியர்
சண்டை என்றாலும் சமாதானம் என்றாலும் உடனே கட்டிபிடித்து விடுகிறார் ரியோ. இதனால் அவரை குட்டி சினேகன், கட்டிப்பிடி வைத்தியர் என்றும் கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
நிஜமற்றது என நிரூபணமானது
இந்நிலையில் ரியோவின் உண்மை முகம் இதுதான் என கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ரியோவின் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும், பாட்டமும் எவ்வளவு நிஜமற்றது என்று கடந்த 2 நாட்களாக நிரூபணமானது.
அத்தோடு பதுங்கியவர்தான்
மூன்று நாட்களுக்கு முன், சற்று ஒதுங்கி அமைதியாயிருந்த ஆரியிடம் வலியச் சென்று "இன்னும் மூன்று நாள்தான் ப்ரோ, சகஜமா ஜாலியா இருங்க, எல்லாரோடயும் சேருங்க ப்ரோ" என்று தோரணையுடன் அட்வைஸ் பண்ணிவிட்டு அத்தோடு பதுங்கியவர்தான், இன்னும் அவரைக் காணாமல் எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மூஞ்சிய பார்கக சகிக்கல
நேற்று நிஷா அவரை "ஏண்டா இப்புடி இருக்க? உன் மூஞ்சியப் பாக்க சகிக்கல" என்று பார்வையாளர்கள் எல்லார் சார்பிலும் கேட்டது நமக்கு ஆறுதலாயிருந்தது. கேபியை ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் அணைத்து, அரவணைத்து தன் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர், அவர் 5 லட்ச பெட்டியை எடுத்துவிட்டார் என்றவுடன் அதைத் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சிக் கூத்தாடி, எமோஷனல் பிளாக்மெயில் செய்து, போராடியும் பார்த்துத் தோற்று அடங்கிப்போனார்.
நொந்து போகும் ரியோ
அந்த அன்பும், உறவும் எங்கே போனது?
ஞாயிறு நிகழ்ச்சியில் ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கைப் பார்த்து கைதட்டப் போகிற நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் நினைத்து நினைத்து நொந்துபோவதைப் பார்க்கமுடிகிறது.
சிரித்துக்கொண்டே போயிருப்பேன்
அதனால் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார். அதுவும் மணல்கோட்டையானது!அதனால்தான் நிஷாவிடம் சொன்னார், "எவிக்ட்டாகிப் போயிருந்தால் கூட சிரித்துக்கொண்டே போயிருப்பேன்" என்று. பார்வையாளர்கள் இதனை நீண்ட நாட்களுக்கு முன்பே கணித்திருந்தனர்!" இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.