Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவின் தாயார் மரணம்!!
பிரபல இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவின் தாயார் சுதக்ஷினா தேவி செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 64.
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுந்தர் சி பாபு.
தொடர்ந்து அஞ்சாதே, நாடோடிகள், விருதகிரி உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர் பிரபல வீணை வித்வான் சிட்டிபாபுவின் மகன் ஆவார். இவரது தாயார்தான் சுதக்ஷனா தேவி. இவர் ஆந்திர வங்கியின் நிறுவனரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் கவர்னருமான பட்டாபி சீதாராமய்யாவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வு நேரத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வீணை வகுப்பு நடத்தி வந்தார் சுதக்ஷனா.
கடந்த சில தினங்களாக உடல்நலமில்லாமல் இருந்தார் சுதக்ஷினா தேவி. நேற்று மாலை அவர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி, செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார்.
அவருக்கு சுந்தர் சி பாபு தவிர, ரங்கசாயி, ராதாகிருஷ்ணா ஆகிய மகன்கள் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது.