Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பழைய இளையராஜா கிடைத்துவிட்டார்! - ’சைக்கோ’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை : இசைக்கு ராஜா என்று சொல்லக்கூடிய இளையராஜாவின் பாடல்களை தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொண்ட ரசிகர்கள் ஏராளம். 80 களில் பிறந்தவர்கள் மட்டும் இன்றி, இளையராஜாவின் பாடல்களை கேட்கும் தற்போதைய தலைமுறை கூட அவரது இசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவுக்கு தனது இசையின் மூலம் மாயாஜாலம் காட்டி மக்களை சொக்க வைக்கும் திறன் படைத்த இளையராஜா, சமீபகாலமாக தனது மாயாஜால வித்தையை காட்டாமல் இருந்த நிலையில், 'சைக்கோ' படத்தின் மூலம் மீண்டும் தனது இசை ஜாலத்தால் மக்களை சொக்க வைத்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'சைக்கோ'. இதில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் ராம், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா..." என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. கபிலன் எழுதியிருக்கும் இப்பாடலை சித்து ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இப்பாடல் வெளியான நாள் முதல், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் இப்பாடல் தான் ஒலிக்கிறது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்இந்த பாடலை ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. அதிலும், பல சினிமா பிரபலங்கள் இப்பாடலை கேட்டு, ராஜாவை கொண்டாடி மகிழ்ந்து, சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.
அப்படி என்ன இருக்கிறது, அந்த பாடலில், என்று யோசிப்பவர்கள், பாடலை ஒரு முறை கேட்டுவிட்டால் போதும், பிறகு திரும்ப திரும்ப கேட்பீர்கள். அந்த அளவுக்கு ராஜாவின் மெட்டில் வலியும், வேதனை கலந்த இனிமையும் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் முழுமையான இசையை கேட்ட சந்தோஷமும், திருப்தியையும் இப்பாடல் கொடுக்கிறது.
'நந்தலாலா', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என இயக்குநர் மிஷ்கின் - இளையராஜா கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் இசையால் பெரிதும் வரவேற்பு பெற்றது. அதிலும், 'நந்தலாலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இயக்குநர் மிஷ்கினின் நடிப்பு திறனை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணி இசை தான். அப்படத்தில் இளையராஜா அமைத்த பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க செய்ததோடு, பொறுமையாக நகரும் படத்தை ரசிகர்கள் முழுமையாக பார்க்கச் செய்ததும் இளையராஜாவின் இசை தான், என்று விமர்சகர்கள் பாராட்டியிருந்தார்கள்.
இப்படி மிஷ்கினுக்கு தனது இசை மூலம் புதிய அங்கீகாரத்தைக் கொடுத்த இளையராஜா, மூன்றாவது முறையாக மிஷ்கினுடன் இணைந்திருக்கும் 'சைக்கோ' படத்தின் பாடல் பெற்ற வரவேற்பால், அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.