Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"கொம்பன்" கார்த்தியைத் தொடர்ந்து "சிங்கம்" சூர்யாவைக் கையில் எடுக்கும் "குட்டிப்புலி" முத்தையா!
சென்னை: முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையாவுக்கு அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கொம்பன்' வசூல் ரீதியாக ஹிட்டடித்தது.
''மெட்ராஸ்' படத்துக்குப் பின் கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட்டாகவும் 'கொம்பன்' அமைந்தது.இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவை, முத்தையா இயக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
அம்மா, மாமனார், பாட்டி என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான செண்டிமெண்ட்டை வைத்த முத்தையா இதில் அப்பா செண்டிமெண்டை கையில் எடுக்கவிருக்கிறாராம்.
சூர்யாவுக்கு அப்பாவாக ராஜ்கிரணை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ''முத்தையா எங்கள் படத்திற்கு கதை எழுதுவது உண்மைதான் ஆனால் ஹீரோ யார்? என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறுகின்றனர்.
எனினும் சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.