Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
"கொம்பன்" கார்த்தியைத் தொடர்ந்து "சிங்கம்" சூர்யாவைக் கையில் எடுக்கும் "குட்டிப்புலி" முத்தையா!
சென்னை: முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையாவுக்கு அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கொம்பன்' வசூல் ரீதியாக ஹிட்டடித்தது.
''மெட்ராஸ்' படத்துக்குப் பின் கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட்டாகவும் 'கொம்பன்' அமைந்தது.இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவை, முத்தையா இயக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
அம்மா, மாமனார், பாட்டி என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான செண்டிமெண்ட்டை வைத்த முத்தையா இதில் அப்பா செண்டிமெண்டை கையில் எடுக்கவிருக்கிறாராம்.
சூர்யாவுக்கு அப்பாவாக ராஜ்கிரணை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ''முத்தையா எங்கள் படத்திற்கு கதை எழுதுவது உண்மைதான் ஆனால் ஹீரோ யார்? என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறுகின்றனர்.
எனினும் சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.