Don't Miss!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா?
சென்னை: விஷால்-கார்த்தி இருவரையும் முத்தையா இயக்கப்போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
கார்த்தியை வைத்து 'கொம்பன்', விஷாலை வைத்து 'மருது' படங்களை இயக்கியவர் முத்தையா. தனித்தனியே இரண்டு பேரையும் இயக்கிய முத்தையாவுக்கு தற்போது ஒரே படத்தில் இருவரையும் இயக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.
நடிகர் சங்க கட்டிடத்திற்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்திற்காக பல்வேறு இயக்குநர்களும் கதை சொன்னதில் முத்தையா சொன்ன கதை இருவருக்கும் பொருந்தும்படி இருக்கிறதாம்.
இதனால் இருவரையும் இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மருது' சுமாராக ஓடியதால் விக்ரம் பிரபுவை இயக்கும் வாய்ப்பை முத்தையா நழுவ விட்டிருக்கிறார்.
விக்ரம் பிரபுவை இயக்க முடியாவிட்டாலும் கார்த்தி-விஷாலை ஒருசேர இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் மனிதர் மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கும், முத்தையா கதையெழுதி வருவது குறிப்பிடத்தக்கது.