Just In
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 16 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்!
- Lifestyle
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'வீரப்பனை இழிவுபடுத்தும் வனயுத்தத்தை தடை செய்ய வேண்டும்!' - மனைவி முத்துலட்சுமி

குப்பி படத்தை இயக்கிய ஏஎம்ஆர் ரமேஷ், வன யுத்தம் என்ற பெயரில் சந்தனக்காட்டு வீரப்பன் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார். இந்தப் படம் தனது அனுமதி இல்லாமல், தப்புத் தப்பான தகவல்களுடன் தயாராகி வருவதாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வனயுத்தம் படம் ஒரு மோசடியான வேலை. வீரப்பன் எனது கணவர். அவரைப் பற்றிய படத்தை எடுக்கும் இயக்குநர் ரமேஷ், குறைந்தபட்சம் எனது சம்மதம் கூட கேட்காமல் வீரப்பன் பற்றி வன யுத்தம் படத்தை எடுத்து வருகிறார்.
இந்தப் படம் தொடர்பாக 2 முறை என்னை சந்தித்து பேசியதாகவும் பொய்யான தகவல்களை அவர் பரப்பி வருகிறார். மேலும் பழ.நெடுமாறன், இயக்குநர்ர் கவுதமன், கொளத்தூர் மணி ஆகியோரை சந்தித்து தகவல்களை திரட்டியதாகவும் கூறி வருகிறார்.
இதில் துளி அளவுகூட உண்மை இல்லை. எனது கணவரை வைத்து சினிமா எடுத்து சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ரமேஷ் செயல்படுகிறார். எனவே இந்த படத்தை தயாரிப்பவர்கள் இதற்கு துணை போகவேண்டாம். எனது வேடத்தில் நடிக்கும் நடிகை அரைகுறை ஆடையுடன் வருவது போலவும் படத்தில் காட்சிகள் இடம் பெறுகின்றன.
எனது கணவர் பற்றிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவரை பற்றி பொய்யான தகவல்களுடன் வெளிவரும் இதுபோன்ற படங்கள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். எனவே எனது கணவரை காட்டுக் கொள்ளையன்போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள வன யுத்தம் படத்தை தடை செய்யவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நான் வழக்கும் தொடர்ந்துள்ளேன்," என்றார்.