Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வனயுத்தம் படத்தின் காட்சிகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்கு!
இந்தப் படத்தை இன்று வெளியிடப் போவதாக படத்தின் இயக்குநர் ரமேஷ் அறிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கூறிவிட்டனர். எனவே இன்று படம் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் 32 காட்சிகளை நீக்குமாறு முத்துலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அவற்றில் 2 காட்சிகளை மட்டுமே இயக்குநர் நீக்கியதாகவும், மற்ற காட்சிகளை அனுமதித்தால் தனது மகள்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் முத்துலட்சுமி கோரியிருந்தார்.
ஆனால் ஏற்கெனவே படம் வெளியாவது குறித்து அறிவித்துவிட்டதால், படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநர் ரமேஷ் தரப்பில் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். முத்துலட்சுமியுடன் பேசி சுமுக உடன்பாட்டுக்கு வருமாறு நீதிபதிகள் ரமேஷ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இந்தப் படம் இன்று வெளியாகவில்லை. இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவிருக்கிறது.