Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லண்டனில் சிக்கிய தம்பி.. மன அழுத்தத்தால் பாதிப்பு.. எப்ப திருப்ப முடியுமோ? பிரபல ஹீரோயின் கவலை!
சென்னை: கொரோனாக காரணமாக, லண்டனில் சிக்கிக்கொண்ட தம்பியின் உடல் மற்றும் மனநிலை குறித்து பிரபல நடிகை கவலை அடைந்துள்ளார்.
Recommended Video
ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை மாளவிகா மோகனன்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்!
மஜித் மஜிதி
பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனன், கன்னடப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
மாஸ்டர் ஹீரோயின்
இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர், லாக்டவுன் காரணமாக, லண்டனில் சிக்கிக்கொண்ட தனது தம்பி, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சகோதரர் ஆதித்யா லண்டனில் படித்து வருகிறார். படிக்கும் கல்லூரிக்கு வெளியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் படித்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
மன அழுத்தம்
அதனால் தனியாக இருக்கிறார். கொரோனாவுக்கு லண்டன் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அங்கு இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அவருக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயமற்ற தன்மையால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அறையில் சமையல் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
உறவினர்கள்
ரெஸ்டாரன்ட்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அங்கு எங்களுக்கு எந்த உறவினர்களும் இல்லை. அதனால் அவரது உடல் மற்றும் மனநிலை குறித்து கவலையாக இருக்கிறது.
இந்திய தூதரகம்
இந்தப் பிரச்னை எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. மே 3 ஆம் தேதிக்குப் பிறகாவது அவரால் இந்தியா திரும்ப முடியுமா? என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஆதித்யா பலமுறை மெயில் அனுப்பியும் சரியான சரியான பதில் கிடைக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.