Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையராஜா இசையமைக்க வரும் முன்பே அப்பா பாட வந்துவிட்டார்: எஸ்.பி.பி. சரண்
சென்னை: இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பில் இருந்தே என் தந்தை பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் என எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
காப்புரிமை கேட்டு இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
இளையராஜா
இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பில் இருந்தே என் தந்தை பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். என் தந்தை பாட வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி தான் பல்வேறு நாடுகளில் எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
பாடல்
இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் என் தந்தை 2 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். அது போக மற்றவர்கள் இசையில் அவர் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். நாங்கள் அந்த பாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொள்கிறோம்.
ராஜா சார்
அப்பா இனி ராஜா சார் பாடல்களை பாட மாட்டார். ராஜா சாருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறிவிட்டார்.
பேச்சு இல்லை
இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் ராஜா சார் தரப்பில் யாரிடமும் பேசவில்லை. வக்கீல் நோட்டீஸுக்கு மட்டும் சட்டப்படி பதில் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார் சரண்.