Don't Miss!
- News நாளை வாக்குப்பதிவு.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்.. ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என் மகளை பல முறை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார்கள்: நடிகையின் தாய் கண்ணீர்
Recommended Video
ஹைதராபாத்: என் மகளை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டார்கள். அது தற்கொலை அல்ல என்று நடிகை பிரத்யுஷாவின் தாய் தெரிவித்துள்ளார்.
மனுநீதி படம் மூலம் கோலிவுட் வந்த பிரத்யுஷா பொன்னான நேரம், கடல் பூக்கள், தவசி, சவுண்ட் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்தார். அவர் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.
பிரத்யுஷா சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் பிரத்யுஷாவின் தாய் சரோஜினி தேவி தெலுங்கு மீடியாக்களிடம் தற்போது கூறியிருப்பதாவது,
கொலை
என் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதிகாரம்படைத்த ஒரு கூட்டம் அவரை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டது. அந்த கூட்டத்திற்கு சித்தார்த் ரெட்டி உதவி செய்தார்.
சதி
என் மகளை நான் கடைசியாக பார்த்தபோது அவர் நலமாக இருந்தார். என் மகளின் மரணத்தில் சில தெலுங்கு அரசியல் கட்சிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளது. அதனால் குற்றத்தை மூடி மறைத்துவிட்டனர்.
படங்கள்
என் மகளின் சினிமா வாழ்க்கை பிக்கப்பானதால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். கன்னட படத்தில் நடிக்க பெங்களூருவுக்கு கிளம்பவிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.
எதிர்ப்பு
என் மகளின் காதலை நான் எதிர்க்கவில்லை. முதலில் கெரியரில் கவனம் செலுத்துங்கள் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் கூறியிருந்தேன் என்றார் சரோஜினி.
சர்ச்சை
பிரத்யுஷா தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் கழுத்தை யாரோ நெறித்ததால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என்றும், அவரின் உடலில் பலாத்காரம் செய்ததற்கு தடயமாக விந்து இருந்தது என்றும் பிரத்யுஷாவின் உடலை சோதனை செய்த தடயவியல் நிபுணர் முனிசாமி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.