Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என்னை தொழில் ரீதியாக முடக்க சதி!- கவுதம் மேனன்
சென்னை: என்னை தொழில் ரீதியாக முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கவுதம் மேனன் கைதாகும் சூழல் எழுந்துள்ளது.
இதுகுறித்து கவுதம் மேனன் கூறுகையில், "என் தொழிலை முடக்கி போடுவதற்காகவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நான் வேறு நபர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
நான் எப்போது படவேலைகளை துவங்குகிறேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தபோதே முதல் மிரட்டல் வந்தது. வழக்குப் போட்டார்கள். அதன் பிறகு சிம்பு, அஜீத் படங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் மீண்டும் வழக்கு போட்டார்கள்.
இப்போது அஜீத் பட வேலையை துவங்க இருப்பதால் மீண்டும் கோர்ட்டுக்கு போய் உள்ளனர்.
என் பக்கத்து நியாயங்களை விளக்கி பதில் மனு தாக்கல் செய்து உள்ளேன். ஏற்கனவே இந்த புகாரை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்பதையும் தெரிவித்து உள்ளேன்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் போன்றோர் இப்பிரச்சினையில் தீர்வு காண முன் வந்துள்ளனர். இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.