Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இந்த நாள் வரும்னு என் தோப்பனார் அன்றே சொன்னார்: காயத்ரி ரகுராம்
Recommended Video
சென்னை: எங்க அப்பா அன்றே சொன்னார் என்று கமல் பற்றி ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று புது அவதாரம் எடுத்துள்ளார். அவரை பார்க்க கூடிய கூட்டத்தை பார்த்து பலரும் ஆடிப் போயுள்ளனர். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
சிறந்த தலைவர்
கமல் சாரை பார்த்து என் தந்தை பெருமைப்படுவார். நான் முழுவதுமாக பெருமைப்படுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே அவரை நல்ல தலைவராக பார்க்கிறேன். கமல் அரசியல்வாதியாகும் நாள் பற்றி என் தந்தை பேசியிருக்கிறார். அவர் நல்ல தலைவராக இருப்பார். அவர் பெரிய பொறுப்பேற்றுள்ளார். அவருக்காக எப்பொழுதும் பிரார்த்தனை செய்வோம் என்று காயத்ரி ரகுராம் ட்வீட்டியுள்ளார்.
|
ஏன்?
பாஜகவில் இருக்கும் காயத்ரி ரகுராமை கமலின் கட்சியில் ஏன் சேரவில்லை என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
அரசியல்
பிரார்த்தனை செய்வதற்கு பதில் நாம் அவர் பக்கம் நின்று அவரை ஆதரிக்க வேண்டும். பெருமைப்பட்டால் அவருடன் சேர வேண்டியது தானே என்று ஒருவர் காயத்ரியிடம் கேட்டார்.
|
கமல் ஹாஸன்
கண்மூடித்தனமாக பின்பற்றுவது அவர் பக்கம் இருப்பது என்று இல்லை. அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிற கட்சிகளை விட வலுவாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இது எளிது அல்ல என்பது எனக்கு தெரியும் என்று பதில் அளித்துள்ளார் காயத்ரி.