Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜோதிகாவோடு வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ரொம்ப அழகா இருக்கு... : சூர்யா
சென்னை: 'இருவர் ஒன்றானால்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, தனது காதல் திருமண வாழ்க்கை மற்றும் திரையுல வாழ்க்கை குறித்து மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம்.சம்பத்குமார் தயாரிப்பில், அன்பு.ஜி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் 'இருவர் ஒன்றானால்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவ- மாணவிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நடிகர் சூர்யா விழாவுக்கு தலைமை ஏற்றார். விழாவில் டைரக்டர் சரவணன், இந்துஸ்தான் பல்கலைக்கழக இயக்குனர் அசோக்வர்கீஸ், வேந்தர் எலிசபெத் வர்கீஸ், தயாரிப் பாளர்கள் சம்பத்குமார், ரவிக்குமார், ஒளிப்பதி வாளர் குமார்ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சூர்யா பாடல் சிடியை வெளியிட்டு, பின்னர் மாணவ-மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினார். திரையுலக வாழ்க்கையோடு தனது காதல் திருமண வாழ்க்கை குறித்த சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொண்டார் சூர்யா.
மேலும், விழாவில் சூர்யா பேசியதாவது....
ஞாபகம் வருதே....
மாணவ-மாணவிகள் முன்னால் விழா நடப்பது சந்தோஷமா இருக்கு. நான் காலேஜ் முடிச்சி பல காலம் ஆச்சு. உங்களை பார்க்கும்போது மறுபடியும் அந்த ஞாபகம்.
குவியும் வாழ்த்துக்கள்...
எனக்கு இன்று திருமண நாள். நிறைய பேர் இங்கு வாழ்த்து சொன்னீங்க. பேஸ் புக்கிலும் எக்கச்சக்கமா வாழ்த்து குவியுது.
முதல் படைப்பு...
இருவர் ஒன்றானால் படக்குழுவினர் முதல் படைப்பாக இதை உங்கள் முன் கொண்டு வர்றாங்க. நீங்க சப்போர்ட் பண்ணனும். இந்த படத்தின் நாயகன் பிரபு நடனம் பயின்று நிறைய நாட்கள் சினிமா கனவோடு இருந்து இப்ப நடிக்க வந்துள்ளார். நல்லா நடனம் பண்ணி இருக்கார்.
தீவிர விவாதம்....
நாம் நினைப்பது கிடைக்கும். பிரபுவுக்கும் கிடைச்சிருக்கு. சினிமா சாதாரண விஷயம் இல்லை. வசனம் எப்படி இருக்கனும். பிரேம் எப்படி இருக்கனும். சீன் எப்படி அமையனும். லோக்கேஷன் எங்கு போகனும் என்றெல்லாம் ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய விவாதம் பண்ணி பிறகு ஷூட்டிங் போறாங்க.
நல்ல டீம்....
‘இருவர் ஒன்றானால்' படத்தையும் அப்படித்தான் செதுக்கி இருப்பாங்கனு நம்புறேன். போஸ்டர், பாடல், சீன்கள் எல்லாம் இதில் சிறப்பா அமைசிருக்கு. இந்த படத்தில் இருப்பவர்கள் நல்ல ‘டீம்'. தயாரிப்பாளர் என்னோட நிறைய படங்களில் வேலை பார்த்து இருக்கார். கஜினி படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.
டான்ஸ் ஆடத் தெரியாது...
நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான போது நான் புதுசு. நடனம் ஆடவே தெரியல. என்னை ஆதரித்து இந்த அளவுக்கு உயர்த்தியது போல் இருவர் ஒன்றானால் படக்குழுவினருக்கும் ஆதரவு கொடுங்கனு கேட்டுக்குறேன்.
திருமணத்திற்குப் பிறகும் காதல்....
காதல் படமாக எடுத்து இருக்காங்க. காதல் 14 வயதில் துவங்கி 25 வயதில் முடியுறது இல்ல. ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்த பிறகும் அது குறையக்கூடாது.
அழகான நாட்கள்....
நான் ஜோதிகாவை மணந்து 7 வருடங்கள் ஆகிறது. காதலித்து 12 வருடங்கள் ஆகிறது. அந்த காதல் அப்படியேதான் போய்ட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் அழகா தெரியுது.
வாழ்த்துக்கள்....
காதல் அப்படித்தான் இருக்கனும் பசங்களுக்கு திருமணத்துக்கு பிறகு காதல் குறைஞ்சி போயிடுது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி குறைய விடாதீர்கள். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்' என இவ்வாறு சூர்யா கூறினார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே