Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகர் சங்கக் கட்டடத்தில் என் கல்யாணம் தான் முதல் ஃபங்ஷன் - விஷால் 'குஷி 'அறிவிப்பு
நடிகர் சங்கக் கட்டடத்தில் என் திருமணம் தான் முதலில் நடக்கும் என நடிகர் விஷால் அறிவித்தார்.
சென்னை: நடிகர் சங்கக் கட்டடத்தில் என் திருமணம் தான் முதல் நிகழ்வாக இருக்கும் என நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையைடுத்து நடிகர் சங்க வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படக் கூடாது என தடை வாங்கியவர்கள் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. தடை நீங்கியுள்ளதால் கட்டடப் பணிகள் விரைந்து நடக்கும்.
கட்டடத்தின் அடித்தள பணிகள் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் கட்டடத்தை எழுப்பும் வேலைக்கு புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். நடிகர் சங்கத்தில் எல்லா விஷயங்களும் அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே நடக்கிறது. அதனால் இதில் ஏதேனும் ஊழல் நடக்குமா என யாரும் விழித்திருந்து பார்க்கும் தேவை இல்லை.
கட்டடப்பணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிதாக எழும்பும் நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் நிகழ்வாக என் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என விஷால் கூறினார். அப்போது துணை தலைவர் பொன்வண்ணன் உள்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.