Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதை பற்றி மட்டும் கேட்காதீர்கள், நான் சொல்ல மாட்டேன்: ஸ்ரேயா
சென்னை: திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. தனக்கு பிடித்தமான சினிமா துறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவர் கூறியிருப்பதாவது,
பெண் இயக்குனர்
வீர போக வசந்த ராயலு படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. அந்த படத்தில் சுஜானாவுடன் சேர்ந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி. தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன். இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது.
மாற்றம்
கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்?.
கதாபாத்திரம்
சுவாரஸ்யம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.
சினிமா
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன் என்கிறார் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்த ஸ்ரேயா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.