Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதை பற்றி மட்டும் கேட்காதீர்கள், நான் சொல்ல மாட்டேன்: ஸ்ரேயா
சென்னை: திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. தனக்கு பிடித்தமான சினிமா துறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவர் கூறியிருப்பதாவது,
பெண் இயக்குனர்
வீர போக வசந்த ராயலு படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. அந்த படத்தில் சுஜானாவுடன் சேர்ந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி. தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன். இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது.
மாற்றம்
கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்?.
கதாபாத்திரம்
சுவாரஸ்யம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.
சினிமா
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன் என்கிறார் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்த ஸ்ரேயா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.