ரஹ்மான் ஒரு ஜீனியஸ்... - மத்திய அமைச்சர் கபில் சிபல்

By Shankar

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மாந் ஒரு ஜீனியஸ் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல். இவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் தற்போது கவிஞராகவும் மாறியுள்ளார். தன் கைப்பட இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

My words found their soul in A R Rahman's music - Kapil Sibal

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் கபில் சிபலின் சொந்த அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.

இசை ஆல்பம்

இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், "ஒருவர் கவிதை எழுத தொடங்கினால் தன்னை சுற்றி இருப்பவை கூட அந்த பணியில் முக்கியமானவர்களாக வந்து சேர்ந்து விடும். எனது கவிதைகள் வழியே இதனை நான் கண்டுணர்ந்தேன். அதன் வெளிப்பாடு மிக அழகாக இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.

ஆல்பத்தின் கரு

ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை பயணம் தொடங்குவது மற்றும் ஒரு பெண்ணின் போராட்டங்கள் பற்றிய கதை பின் இறுதியில் அடையும் வெற்றி என்று தொடங்கி அன்பு, காதல் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

"எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன," என சிபல் குறிப்பிட்டுள்ளார்.

கவிதையில் விருப்பம்

மேலும் அவர் கூறுகையில், "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது.

அவர் இசையை உருவாக்குகிறார். நான் பாடல்களுக்கு வரிகளை எழுதும்போது, அது சரியான வெளிப்படுத்துதலை கொண்டவரிடம் சென்று சேர வேண்டும் என விரும்பினேன். அது ரகுமான் இசையில் இருப்பதாக நான் நினைத்தேன்," என்றார்.

நேரம் ஏது?

இந்திய அரசியலில் அதுவும் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் கபில் சிபல், கவிதை எழுதுவதற்கு நேரம் ஏது?

"நீங்கள் ஏதேனும் ஒன்றை உண்மையிலேயே விரும்பினால், அதனை பின் தொடர்வதற்கு நிச்சயம் நேரத்தை கண்டுணர்வீர். நான் மனப்பூர்வமாக அன்பு வயப்பட்டேன். அதனை வெளியிடும் விதமாகவே, கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த பாடல்களை எழுதியுள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X