Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி
சென்னை: தான் சொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.
Recommended Video
தேசிய விருது பெற்ற பாரம் படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சுபா.முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆருத்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து தயாரித்துள்ளனர். ஜெயந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். வேத் நாயர் இசை அமைத்திருந்தார்.
போஸ்டர் ஒட்டுவேன்
இந்தப் படம் கடந்த 21 அன்று வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் இயக்கிய சைக்கோ எல்லாம் ஒன்றுமில்லை. இதுதான் படம். படத்தை விளம்பரப்படுத்த போஸ்டர் அடிக்க பணம் இல்லை என்றார்கள். இந்த படம் வெளியாகும்போது தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார்.
சொந்த செலவில்
சொன்னபடியே, தற்போது அதை செய்து காட்டியுள்ளார். பாரம் படத்திற்காக அவர் தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். சென்னையின் சில பகுதிகளில் அவர் போஸ்டர் ஒட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இயக்குநர் மிஷ்கினின் செயலுக்கு பாரம் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அன்பும் ஆதரவும்
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி கூறும்போது, 'பாரம் படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பு இல்லை. அவர் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்துகொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது.
பெருகியிருக்கிறது
இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது அவர் பேசியதில் இருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பரவ ஆரம்பித்தது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.