Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இதெல்லாம் உண்மைதானா? ஷூட்டிங்கில் தெறிக்கவிட்ட நிஜ பேய்.. அதிர்ச்சியில் ஹீரோயின்.. படக்குழு பதட்டம்!
சென்னை: பேய் காட்சியை படமாக்கும்போது நிஜ பேயை உணர்ந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழில், அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்தவர், நந்திதா ஸ்வேதா.
தமிழ்த் தவிர, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் நந்திதா, இப்போது நடிக்கும் படத்துக்கு, ஐபிசி 376 என்று டைட்டில் வைத்துள்ளனர். இது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம்.
இரண்டு லுக்-கில் நந்திதா
இந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இவர், இயக்குனர்கள் பிரபு சாலமன், பாலசேகரனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். பவர் கிங் ஸ்டூடியோ சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா இரண்டு லுக்-கில் வருகிறார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி வேடம்.
பேய் வருவது
த்ரில்லர் படமாக உருவாகும் இதில், சூப்பர் சுப்பராயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகாநதி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை மற்றும் ஏலகிரியில் நடந்துள்ளது. ஏலகிரியில் ஒரு ரிசார்ட்டில் ஷூட்டிங் நடந்த போது பேய் வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஷாக் கொடுப்பதற்காக
ஹீரோயின் நந்திதா படுத்திருக்கும்போது ஏதோ சத்தம் கேட்கிறது. அவர் கதவை திறந்து பார்க்க வேண்டும், அப்போது அங்கு பேய் நிற்பது போன்ற காட்சியை படமாக்கவேண்டும். ஷாட் ரெடியானதும், நந்திதா எழுந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காதவாறு அறைக்குள் இருந்த பீரோ கதவு திடீரென தன்னால் திறந்தது. படக்குழு தனக்கு ஷாக் கொடுக்க இதை செய்திருப்பதாக நினைத்துக் கொண்டு, நந்திதா நடித்தார். ஆனால், காட்சி முடிந்ததும் தான் தெரிந்தது, அந்த பீரோ கதவு, தன்னால் திறந்தது என்று.
தன்னால் திறந்த கதவு
இதைக் கேட்டதும் நந்திதா ஷாக் ஆனார். இந்த அமானுஷ்ய சம்பவம் படக்குழுவினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் அடுத்தக் காட்சியில் நடிக்க, நந்திதா பயந்தார். தைரியம் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். இதுபற்றி இயக்குனர் ராம்குமார் சுப்பாராமனிடம் கேட்டபோது, ' அது உண்மைதான். பேய் காட்சியில் நிஜ பேய் வந்தது போல நினைத்துக் கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காமல் அந்த பீரோ திறந்தது, அதிர்ச்சிதான்.
பாலியல் வன்கொடுமை
அது அப்படியே விஷூவலாகவும் இருக்கிறது. பட ரிலீஸ் நேரத்தில் அந்த ஆச்சரியத்தைத் திரையிட்டு காட்ட இருக்கிறோம். இது பெண்களின் பெருமை பேசும் படம். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதைத் தாண்டி யூகிக்க முடியாத மற்றொரு விஷயமும் படத்தில் இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம். பெண்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!