Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!
‘சைவம்' படத்தில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி, நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றுத் தந்த பாடல் வரிகள்... இதோ..
இந்தப் பாடலைப் பாடிய உத்ரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு !
சரணம் 1
குயிலிசை அது பாடிட - ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட - ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித் துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு !
சரணம் 2
இதயமும் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்...
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே...
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !
அதையும் தாண்டிப் பேசும் நம் நேசம் ரொம்ப அழகு !