Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நம்பிக்கை தந்த நாச்சியார் வசூல்!
Recommended Video
இந்த வருடம் ஜனவரி முதல் கடந்த வாரம் வரை ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில்எதுவும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெறவில்லை. சுநத்ர் சியின் கலகலப்பு 2 பரவாயில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை 1. நாகேஷ் திரையரங்கம், 2. வீரா, 3. மேல் நாட்டு மருமகன், 4. மனுஷனா நீ, 5. நாச்சியார் என ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின.
இவற்றில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்க பாலா இயக்கி தயாரித்து வெளியான நாச்சியார் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப வெள்ளிக்கிழமை வெளியீட்டில் நாச்சியார் தமிழ்நாடு முழுவதும் சுமார் 350 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
சுமார் 10 கோடி வரை திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் தரப்பில் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு உரிமையை படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப 5.50 கோடிக்கு தயாரிப்பாளர் பாலா விற்பனை செய்திருந்தது விநியோகஸ்தர்களுக்கு தெரிய வந்ததது.
ஏரியா விலையை குறைக்க வேண்டும் என கூறி திருச்சி விநியோகஸ்தர் பேசிய விலையில் (1 கோடி) பணத்தை செட்டில் செய்ய மறுத்தததால் திருச்சி ஏரியாவில் நாச்சியார் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் விலை குறைக்கப்பட்டு படம் வெளியானது. முதல் நாள் பாலா படத்திற்கான குறைந்தபட்ச ஓபனிங் இருந்தாலும் அதிரி புதிரியான வசூல் தியேட்டர்களில் இல்லை.
சனி, ஞாயிற்று கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் மோசமான வசூல் இல்லை. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் நாச்சியார் வசூலித்த தொகை சுமார் 4 கோடியே 69 லட்சம்.
நாச்சியாருடன் களமிறங்கிய மற்ற நான்கு படங்களும் மிக மோசமான வசூலைப் பெற்றன. வரும் நாட்களில் நாச்சியார் மட்டுமே தியேட்டர்களில் முதல் வாரத்தை நிறைவு செய்யும் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். பிறபடங்கள் அது போன்று தொடர வாய்ப்பு இல்லை என்பதே சினிமா வட்டார தகவல்.