Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாடோடிகள் 2 : முதல் பாகத்துல நட்புக்காக போராடுன சசி அண்ட் கோ.. இதுல எதுக்காக போராடுறாங்க தெரியுமா?
நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
சென்னை: சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அனன்யா, விஜய் வசந்த், பரணி, அபிநயா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் நாடோடிகள். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் - 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சாதிப் பிரச்சினை:
இந்நிலையில் நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சாதிப் பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
4 இளைஞர்கள்:
நாடோடிகள் முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குனர் சமுத்திரக்கனி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். சாதிக்கு எதிராக போராடும் நான்கு இளைஞர்களின் கதை தான் நாடோடிகள் 2.
ஜீவாநந்தம்:
இப்படத்தில் சசிகுமார் கதாபாத்திரம் பெயர் ஜீவாநந்தம். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மறைந்த தோழர் ஜீவாநந்தத்தின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூக போராளி செங்கொடியின் நினைவாக, அஞ்சலி கதாபாத்திரத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி:
சமூக அக்கறைமிக்க மனிதராக விளங்கும் சமுத்திரக்கனி, தனது படங்களில் அட்வைஸ் மழை பொழிவதுண்டு. அதுவும் இந்த படத்தில் சாதிக்கு எதிராக சாட்டையை கையில் எடுத்திருப்பதால், அட்வைஸ் வெள்ளத்தில் தியேட்டரே மூழ்கினாலும் அஞ்சுவதற்கு இல்லை. படம் வெளிவரும் போது பார்ப்போம்.