Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டிவி நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. 'நாகினி 5' ஷூட்டிங் திடீர் கேன்சல்.. அனைவருக்கும் டெஸ்ட்!
மும்பை: பிரபல சின்னத்திரை நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நாகினி தொடரின் படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா! இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் தெரியுமா?
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலைகா அரோரா
கொரோனா, பிரபலங்களுக்கும் பரவி இருக்கிறது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்றனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நிக்கி கல்ராணி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
சரத் மல்ஹோத்ரா
பல சின்னத்திரை நடிகர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்போது மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியில் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருபவர் சரத் மல்ஹோத்ரா. டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், இப்போது நாகினி 5 தொடரில் நடித்துவருகிறார்.
பரிசோதனை
இந்த தொடரில் வீரன்ஷூ என்ற கேரக்டரில் நடித்துவருகிறார். இவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீட்டில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் கூறும்போது, 'லேசான அறிகுறிதான். இருந்தாலும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
ஷூட்டிங் நிறுத்தம்
இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நாகினி 5 தொடரின் படப்பிடிப்பு, 3 நாகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குப் பிறகு சரத் மல்ஹோத்ரா ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!