Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குடித்துவிட்டு அடிக்கிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார்: கணவர் மீது நடிகை புகார்
மும்பை: தன் கணவர் தன்னை தாக்கியதாக நாகினி தொடரில் நடித்த அர்ஜூ கோவித்ரிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாகினி உள்ளிட்ட இந்தி தொடர்களில் நடித்து வருபவர் அர்ஜூ கோவித்ரிகர். அவர் கடந்த 2010ம் ஆண்டு தொழில் அதிபரான சித்தார்த் சபர்வாலை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு 5 வயதில் ஆஷ்மான் என்கிற மகன் உள்ளார்.
தனுஷ் 39.. குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!
அடி உதை
மும்பை ஒர்லி பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற அர்ஜூ தனது கணவர் சித்தார்த் மீது புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகளாக சித்தார்த் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனைவி
சித்தார்த்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி பிரச்சனை செய்கிறார். கடந்த மாதம் 15ம் தேதி குடிப் பிரச்சனை தொடர்பாக நான் சித்தார்த்துடன் பேசினேன். அது வாக்குவாதமாக மாறியது. அவர் காலை 4 மணி அளவில் என்னை தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று மோசமாக அடித்தார் என்று அர்ஜூ தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம்
சித்தார்த் தன்னை கொடுமைப்படுத்தியதுடன் மட்டும் இல்லாமல் தன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்று தெரிவித்துள்ள அர்ஜூ சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
நாடகம்
அர்ஜூ சொல்வதில் உண்மை இல்லை. அவர் நடிக்கிறார். கிரைம் நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்க்க தன்னை அறையச் சொன்னார். அவர் புகார் குறித்து உரிய இடத்தில் பார்த்துக் கொள்வேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.