twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறுதிகட்ட படப்பிடிப்பில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”.. தரமான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !

    |

    சென்னை : "நாய் சேகர் ரிட்டன்ஸ்" திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    Naai sekar returns Final Shooting

    இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் மற்றும் இயக்குநருமான பிரபுதேவா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளா. வில்லு படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.

    English summary
    Naai sekar returns Final Shooting, நாய் சேகர் ரிட்டன்ஸ்“ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X