Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு யு சான்றிதழ்
சென்னை : அருள்நிதி நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
‘வம்சம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பேரன். வம்சம் படத்தைத் தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்ட படங்களில் அருள்நிதி நடித்திருந்தார்.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் சிங்கம்புலி, பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
போலீஸ் வேடம்...
நகைச்சுவைப் படமான இதில் அருள்நிதி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் காப்பரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
யு சான்றிதழ்...
இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரவேற்பு...
யூடியூபில் வெளியிடப்பட்ட டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் ரிலீஸ் ?
இதற்கிடையே, டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.