Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இன்றைய டாக் ஆப் தி தமிழ்நாடு.. நான் சிரித்தால் பட வெற்றி தான்.. ரவிமரியா ஹேப்பி!
Recommended Video
சென்னை : நான் சிரித்தால் படம் தான் தற்போது டாக் ஆப் தி தமிழ்நாடு, எல்லா இடங்களிலும் படத்தின் வெற்றி பற்றியே பேசி வருகிறார்கள் என்று ரவிமரியா கூறினார்.
நடிகர் ரவிமரியா வில்லனாக நடித்து வந்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் சிறந்த காமெடியனாக வளம் வந்து மக்களின் மனதில் இடம்பிடித்து இருக்கிறார். ரவிமரியா காமெடியனாக பிரபலமானது தேசிங்கு ராஜா படத்தில் தான். தற்போது ரவிமரியா நான் சிரித்தாரல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் இவர் வரும் காட்சிகளுக்கு சிறந்த பாராட்டும் கைதட்டுகளும் கிடைத்திருக்கிறது.
தற்போது நான் சிரித்தால் படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் பேசிய ரவிமரியா படத்தை பற்றிய தனது கருத்தையும் படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
படம் காதலர் தினத்திற்கு வெளியானது. படம் வெளியானது முதல் எந்த இடத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று ரவிமரியா கூறினார். பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட்டு தான் மாட்டியிருந்தார்கள் இது தான் நான் சிரித்தால் படத்தின் முழுமையான வெற்றியாக நான் பார்க்கிறேன் என்று கூறினார்.
வீட்டில் அந்த ஹீரோவால் அதிரடி பஞ்சாயத்து... பிரபல பூ நடிகையிடம் அவகாசம் கேட்டாராமே காமெடி நடிகர்!
மேலும் வெற்றி விழாவில் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர்கள் எழுதும் போது வெற்றி சந்திப்பு என எழுதுங்கள் மாற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பு என எழுத வேண்டாம் என கேட்டு கொண்டார். மேலும் படம் உண்மையாக வெற்றி பெற்றுள்ளது இதை கொண்டாடுங்கள் அதற்காக தான் இப்படி கூறினேன் என்றார்.
நான் சிரித்தால் படம் தான் தற்போது டாக் ஆப் தி தமிழ்நாடு. எல்லா இடங்களிலும் படத்தின் வெற்றி பற்றியே பேசி வருகிறார்கள். ஹிப்ஹாப் ஆதி எனும் நாயகனின் மூன்றாவது வெற்றி என கூறியிருக்கிறார் .
மேலும் தான் மக்களுடன் திரையரங்கில் படத்தை பார்த்தாக கூறிய ரவிமரியா. மக்கள் படத்தில் வரும் அனைத்து காட்சிகளுக்கும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். முக்கியமாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் பொறி பறந்தது என கூறினார்.
கடைசியாக இயக்குனர் இராணாவை பற்றி பேசிய ரவிமரியா. நகைச்சுவை என்பது ஒரு வரம் அதை இயக்குனர் படத்தில் சரியாக பயன்படுத்தி மக்களை சிரிக்க வைத்து இருக்கிறார். அவருக்கு வாய்பலித்த தயாரிப்பாளர் சுந்தர்.சி மற்றும் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு நன்றி தெரிவித்தார்.