Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘’ நான் உன்னை நீங்க மாட்டேன்’’ … சர்ச்சைக்கு மத்தியில் இளையராஜாவின் பதிவு !
சென்னை : இளையராஜா குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இளையராஜா நான் உன்னை நீங்க மாட்டேன் பாடலை பாடி உள்ளார்.
டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.
இந்தப் புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்று மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு இருந்தார்.
இளையராஜா
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜாவின் கருத்துகள் சமூகவலைத்தளத்தில் பெரும் சூறாவளியை கிளப்பியது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும், இளையராஜாவுக்கு தன் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு என்றும் , இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Recommended Video
மன்னிப்பு கேட்க முடியாது
மேலும், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
நான் உன்னை நீங்க மாட்டேன்
இப்படி பலவிதமான பிரச்சனைகள் இளையராஜாவை சுற்றிக்கொண்டு இருக்க, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி நடித்த தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே" என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து, பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று வரிகளைச் கூடுதலாக சேர்த்து பாடியிருக்கிறார்.
— Ilaiyaraaja (ilaiyaraaja) April 21, 2022 |
பலவித கருத்துக்கள்
இளையராஜா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இளையராஜாவின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்துக்களை கலவையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.