Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நானும் ஒரு குழந்தை' - பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கும் புகைப்படக் கண்காட்சி!
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், 'நானும் ஒரு குழந்தை' எனும் புகைப்படக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் புகைப்படக் கலைஞர் ம.பழனிக்குமார் எடுத்த புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன.
'சாதியை ஒழிப்போம்... சமூக மாற்றத்திற்கான மனிதமாண்பை மீட்டெடுப்போம்' எனும் உறுதிமொழியோடு 'நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சிக்கான கரு தொடங்கியிருக்கிறது.
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் துயரம், மலமள்ளும் தொழிலாளர்கள் அன்றாடம் படும் துன்பங்கள், அவர்களது வாழ்வியல், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம், மரணத்தை தினமும் எதிர்நோக்கும் அவர்களது வாழ்க்கை என விளிம்புநிலை மக்களின் உணர்வுகளைத் தனது புகைப்படங்களின் மூலம் பிரதிபலிக்கிறார் ம.பழனிக்குமார்.
சாதியால் தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களின் துயரத்தை, நேயத்தை, கோரிக்கையை குழந்தைகளின் புகைப்படங்கள் வழியாக எல்லோருக்கும் கடத்த முயற்சித்திருக்கிறார் பழனிக்குமார். இவர் திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#நானும் ஒரு குழந்தை''..மகிழ்வோம் !!!! pic.twitter.com/9KlMG4iSCj
— pa.ranjith (@beemji) November 7, 2017
நவம்பர் 8-ம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாடமியில் இந்தப் புகைப்படக் கண்காட்சியின் துவக்கவிழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை லலித்கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.