'காமசூத்ரா' மன்னனாகிறார் நாசர்!
நாசர் ரொம்ப காலத்திற்குப் பிறகு இந்திக்குப் போகிறார். காமசூத்ரா 3டி படத்தில் அவர் மன்னர் வேடத்தில் நடிக்கிறாராம்.
நாசர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நிறைய நடித்திருந்தாலும் இந்தியில் அதிகம் நடிக்கவில்லை. பாம்பே படம்தான் அவரது நடிப்பை பாலிவுட்டுக்குக் கொண்டு சேர்த்த முக்கியப் படம்.
அதன் பிறகு கமல்ஹாசனின் சாச்சி 420 மூலம் மீண்டும் பேசப்பட்டார். அதேபோல மேலும் சில இந்திப் படங்களும் நாசருக்குப் பெருமை தேடித் தந்தன.

குயிக் கன் முருகன்
குயிக் கன் முருகன் படத்தின் மூலம் இந்தியில் நாசர் மீண்டும் பேசப்பட்டார். இந்தப் படம் பாலிவுட்டைக் கலக்கிய பரபரப்புப் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

ரவுடி ரத்தோர்
அடுத்து நாசர் நடித்த இன்னொரு முக்கிய இந்திப் படம் ரவுடி ரத்தோர். இப்படம் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இது.

விஸ்வரூப் -டேவிட்
சமீபத்தில் நாசர் நடித்த இந்திப் படங்கள் என்றால் அது கமல்ஹாசனின் விஸ்வரூபம் மற்றும் டேவிட்தான்.

காமசூத்ரா
தற்போது நாசர் காமசூத்ரா படத்திற்காக இந்திக்குப் போயுள்ளார். இதில் அவர் மன்னன் வேடத்தில் நடிக்கிறார்.

ஷெர்லின் கலக்கலில்
ஷெர்லின் சோப்ராவின் முழு நீள கவர்ச்சிக்கலக்கலில் உறுவாகும் படம்தான் காமசூத்ரா வாகும். இதை ரூபேஷ் பால் இயக்குகிறார். 3டியில் இது உருவாகுகிறது.


Click it and Unblock the Notifications











