Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்யத் தயார்- கனகாவுக்கு சரத் உறுதி
சென்னை: நடிகை கனகா தனது சொத்துக்களை அபகரிக்க சிலர் முயல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் சங்கம் செய்யும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதியளித்துள்ளார்.
நடிகை கனகா குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
ஆனால் கனகா தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாகவும் அவரே செய்தியாளர்களைக் கூட்டி தெரிவித்ததால் பதட்டம் தணிந்தது.
சொத்துக்களைப் பறிக்க முயற்சி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் கனகா பேசுகையில் தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவருக்கு உதவ நடிகர் சங்கம் முன்வந்துள்ளது.
நாங்க இருக்கோம்
கனகாவுக்கு என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை செய்து தர நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
விரைந்தார் சரத் உதவியாளர்
தனது உதவியாளர் நடேசனை கனகாவிடம் அனுப்பி வைத்த சரத்குமார், இந்தத் தகவலை கனகாவிடம் தெரிவித்தார்.
பறிக்க முயற்சிப்பது யார்
கனகா ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது சொத்துப் பறிப்பு குறித்து அவர் புகார் கூறியுள்ளதால் அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்கள் கிளம்பும் என்று தெரிகிறது.