Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அவங்களுக்கு இருக்கும் அக்கறையில ஒரு பர்சன்ட் கூட அஜீத், விஜய்க்கு இல்லையே!'- நடிகர் சங்கம்
நட்சத்திர கிரிக்கெட் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்த நட்சத்திர கிரிக்கெட்டால் உருவாகியுள்ள கசப்புணர்வு இனி வேறு வேறு வடிவங்களில் வெளிப்படக் கூடும். இந்த கசப்புணர்வுக்குக் காரணமானவர்கள் விஜய்யும் அஜீத்தும்.
திரையுலகில் ஜாம்பவான்கள் என்று கருதப்படும் ரஜினியும் கமலும் கூட அரை நாள் வரை இருந்து பார்த்து உற்சாகப்படுத்திய (கமல் மாலையிலும் வந்தார்) நட்சத்திரக் கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு, ஊரிலிருந்தும்கூட வராமல் தவிர்த்த விஜய், அஜீத் மீது ஏக வருத்தம் திரையுலகினருக்கு.
பக்கத்து மாநிலங்களிலிருந்து பெரிய நடிகர்கள் அத்தனைப் பேரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். தெலுங்கு தேசத்திலிருந்து நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என மும்மூர்த்திகளாக வந்து கலந்து கொண்டனர். அதிலும் பாலகிருஷ்ணா ஒரு நாள் முழுக்க இருந்து உற்சாகப்படுத்தி தன் ஆதரவை வழங்கினார். 'நான் நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். நான் கலந்து கொள்ளாமல் இருப்பேனா?' என்று உரிமையோடு பேசி நெகிழ வைத்தார்.
கேரளாவிலிருந்து மம்முட்டி வந்து கலந்து கொண்டார். கன்னடத்தின் முன்னணி ஹீரோ புனித் ராஜ்குமார், 'இது நான் பிறந்த மண். இந்த நிகழ்ச்சிக்கு வராமல் போனால்தான் தவறு' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
இப்படி பக்கத்து மாநிலத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய்யும் அஜீத்தும் வராமல் போனது, அதுவும் வீட்டிலிருந்து கொண்டே வராமல் தவிர்த்தது திரையுலகினருக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது.
'இந்த இருவரும் ஈகோ பார்க்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிவிட்டது. இப்போது நடிகர் சங்க நிர்வாகத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள். மிக ஆர்வத்துடன் சங்கத்துக்காக உழைக்கிறார்கள். இதன் பலன் பல நலிந்த கலைஞர்களுக்குத்தான் கிடைக்கப் போகிறது. அவர்களும் மக்கள்தானே... ஆனால் அஜீத்தும் விஜய்யும் விஷாலுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்த நடிகர் சங்கத்தை அவமதிக்கிறார்கள் இந்த இரு நடிகர்களும். விஜய்யை பல முறை அழைத்தோம். முயற்சி செய்கிறேன் என்று மட்டும் சொன்னார். ஆனால் அஜீத்தோ அழைப்பிதழையே வாங்கவில்லை தெரியுமா?' என்று கோபப்பட்டார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.
இதென்னப்பா புது பூதமா இருக்கே!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!