Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என்று நடிகை பாபிலோனா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருப்பதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகை ரேகா, சுகன்யா மற்றும் பாபிலோனா ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.
பாபிலோனா
நடிகர் சங்கத் தேர்தலில் இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதிதாக வந்திருக்கும் பாண்டவர் அணிக்கு நான் எனது ஆதரவை தெரிவித்திருக்கிறேன். பாண்டவர் அணியின் 29 உறுப்பினர்களுக்கும் நான் பார்த்துப் பார்த்து வாக்களித்து இருக்கிறேன்.
மாற்றம் இருக்கும்
இந்தக முறை தேர்தலில் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஏமாற்றம் கண்டிப்பாக இருக்காது. ஒருவேளை பாண்டவர் அணி தோல்வியுற்றாலும் அவர்கள் இவ்வளவு தூரம் வந்ததே ஒரு பெரிய வெற்றிதான். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை, என்று நடிகை பபிலோனா கருத்து தெரிவித்திருக்கிறார்.
சுகன்யா
நடிகை சுகன்யா கூறும்போது "நடிகர் சங்கத்தில் ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது, அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். சங்கத்தில் ஒற்றுமை இல்லாமல் இருபது வருத்தமளிக்கிறது,நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அனைவரும் ஒரு சங்கமமாக மாற வேண்டும் என்பதே எனது ஆசை"என்று நடிகை சுகன்யா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ரேகா
நடிகை ரேகா இவ்வளவு பரபரப்பாக தேர்தல் நடந்து நான் பார்த்தது இல்லை, நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒற்றுமையாக மாறுவார்கள். கண்டிப்பாக சங்கக் கட்டிடம் கட்டப்படும் என்று நடிகை ரேகா கூறியிருக்கிறார்.
இவ்வாறு நடிகைகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.