Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கள்ள ஓட்டு, அத்துமீறல், அழுகை, கோபம்: ஒரு வழியாக முடிந்த நடிகர் சங்க தேர்தல்
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தல் ஒரு வழியாக நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒரு வழியாக நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்த இந்த தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1604 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கமல் ஹாஸன், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். அஜித் வாக்களிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என்றார்.
இன்றைய தேர்தலில் பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர். அதனால் அவர் அது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒன்றும் நடக்காது என்று தெரிந்த பிறகு கோபமாக கிளம்பிவிட்டார்.
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து 9 பேர் வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றதால் விஷாலின் பாண்டவர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார். தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை.
பிரச்சார வீடியோவில் பாண்டவர் அணியினர் தனது தந்தை சரத்குமாரை தாக்கிப் பேசியதை பார்த்த வரலட்சுமி கோபம் அடைந்து விஷாலை விளாசி ட்வீட் போட்டார். உங்களுக்கு என் ஓட்டு இல்லை என்றார். இந்நிலையில் அவரும் இன்று வாக்களித்துள்ளார். அந்த ஓட்டு கண்டிப்பாக விஷால் அணிக்கு கிடைத்திருக்காது என்று நம்பப்படுகிறது.
எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர் கூறியதாவது,
இன்றைய தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர். வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்படும். வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றார்.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!